0 0
Read Time:3 Minute, 34 Second

சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் 12 ஆண்டுகளாக இணைப்பு சாலை இல்லாமல் உள்ள பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் 12 ஆண்டுகளாக இணைப்பு சாலை இல்லாமல் உள்ள பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவ கிராமங்கள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார், புதுப்பட்டினம், மடவாமேடு, கொட்டாயமேடு, ஓளை கொட்டாயமேடு, தாண்டவன் குளம், கூழையார், தொடுவாய், திருமுல்லைவாசல் உள்ளிட்ட ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. இந்தநிலையில் மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடலிலிருந்து பிடித்து வரும் மீன்களை விற்பனைக்காக நாகப்பட்டினத்துக்கு விரைவாக கொண்டு செல்ல பழையார், திருமுல்லைவாசல் ஆகிய மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினத்திற்கு நேராக கடற்கரை ஓரம் சாலை வசதிகள் இல்லாததால் சீர்காழி வந்து மீண்டும் நாகப்பட்டினத்துக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இதனை தவிர்க்கும் வகையில் திருமுல்லைவாசல்- கீழமூவர்க்கரை இடையே உள்ள உப்பனாற்றில் பாலம் அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மீனவர்களின் கோரிக்கையை ஏற்று சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 30 கோடியில் திருமுல்லைவாசல் உப்பானற்றில் பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் பக்கவாட்டு இணைப்புச் சாலைகள் அமைக்கப்படாமல் இதுநாள்வரை முழுமை பெறாமல் உள்ளது. இதுகுறித்து மீனவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் பாலத்தின் இருபுறமும் உள்ள பக்கவாட்டு இணைப்புச் சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது. பக்கவாட்டு இணைப்புச் சாலை அமைக்கப்படாததால் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை சீர்காழிக்கு சென்று பின்னர் நாகப்பட்டினத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் திருமுல்லைவாசல் உப்பானற்றில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் இருபுறத்திலும் இணைப்புச் சாலையை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %