0 0
Read Time:1 Minute, 58 Second

தரங்கம்பாடி,அக்.15: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதலில் தரங்கம்பாடி மீனவர்கள் பாதிப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த பூவரசனுக்கு சொந்தமான திலகவதி என்ற ஒரு பைபர் படகில் பூவரசன், (25) தென்னரசன்(30) ஆறுமுகம்(60) நிவாஸ்(24) சந்திரபாடியை சேர்ந்த அருள்ராஜ் (34)சரத்(32) ஆகிய 6 பேர் கடந்த 12ஆம் தேதி மீன்பிடி தொழிலுக்கு சென்றனர்.

இவர்கள் கோடியக்கரையில் இருந்து 20 நாட்டிகள் மையில் வட கிழக்கில் தமிழக எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். வெள்ளிக்கிழமை சுமார் 10 மணி அளவில் நான்கு படகுகளில் இலங்கையில் இருந்து வந்த மீனவர்கள் பூவரசன் படகு மீது மோதி வலை மீன்களை அள்ளிச் சென்றதுடன் தங்களை கற்கள் கம்பு சுலுக்கி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியதாகவும், இந்த திடீர் தாக்குதலால் காயம்பட்ட மீனவர்கள் தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தரங்கம்பாடி கடலோர காவல் நிலையம், மற்றும் பொறையார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படவிளக்கம்: இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்ட தரங்கம்பாடி பகுதி மீனவர்கள் படம்

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %