தேர்தலில் சந்தித்த தோல்விக்கான காரணம் குறித்து கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதேபோல், மக்கள் நீதி மய்யம் கட்சியை சீரமைக்கும் விதமாக மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். கட்சியின் தலைமை நிர்வாகிகள் 10 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அடுத்தடுத்த ராஜினாமா நடவடிக்கைகள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கமல்ஹாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
Read Time:1 Minute, 31 Second