0 0
Read Time:1 Minute, 50 Second

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் ஊழியர்கள் ஓய்வூதிய சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் பாஸ்கரன் ஆசிரியர் நல சங்க தலைவர் சுப்பிரமணியன் ஊழியர் சங்க தலைவர் மனோகர் ஒய்வே சங்க தலைவர் இளங்கோ ஆகிய முன்னிலை வகித்தனர் கூட்டத்திற்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் மற்றும் தினக்கூலி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் 2013 ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான வழங்கிட வேண்டிய பணிக்கொடை மற்றும் ஈட்டிய விடுப்பு ஒய்வூதிய வைப்புத்தொகை ஆகியவற்றை வழங்கிட வேண்டும் என்று 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

மேலும் கோரிக்கை வலியுறுத்தி அடுத்த வாரம் பொறியியல் புல வளாகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வீர்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் பழனிவேல் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %