0 0
Read Time:1 Minute, 7 Second

மயிலாடுதுறை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த பருவமழை வருகிற 29-ந் தேதியில் இருந்து தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடற்கரையோர மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %