0 0
Read Time:1 Minute, 8 Second

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 7 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சமீதா நெய்வேலி தெர்மலுக்கும், பரங்கிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் கருவேப்பிலங்குறிச்சிக்கும், புதுச்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் சோழத்தரத்திற்கும், ஆலடி சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி பரங்கிப்பேட்டைக்கும், சிதம்பரம் நகர சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆவினங்குடிக்கும், கடலூர் முதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சிதம்பரம் நகரத்துக்கும், மருதூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %