0 0
Read Time:1 Minute, 53 Second

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு தினங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எனவே, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விடுமுறை அளிக்கப்பட்டது போல, கனமழை பெய்து வரும் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %