0 0
Read Time:1 Minute, 15 Second

சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பள்ளி வளாகங்களில் தேங்கி நிற்கும் மழை நீர் பம்பு செட் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %