0 0
Read Time:1 Minute, 40 Second

“சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா டாக்டர்களின் கவனக்குறைவினால் நேற்று செவ்வாய்க்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.

மூட்டு வலிக்கு சிகிச்சை பெறச் சென்ற பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களின் தவறினால் காலையே அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது மிகவும் வேதனையானது.
கால்பந்து வீராங்கனையான பிரியாவின் காலை அகற்றியும் கூட அவரை காப்பாற்ற முடியாமல் போனது அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. டாக்டர்களின் அலட்சியம், கவனக்குறைவு, பொறுப்பின்மையே இதற்கு காரணம். பொறுப்பற்ற வகையில் தவறான சிகிச்சையளித்த டாக்டர்களை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. பிரியாவின் மரணத்திற்கு காரணமான டாக்டர்கள் பால்ராம் சங்கர் மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் மீது கொலை வழக்குபதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
மேலும், வாழ்நாள் முழுவதும் மருத்துவப் பணி செய்ய அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்”.

இவ்வாறு இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %