0 0
Read Time:2 Minute, 4 Second

தமிழக மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் அவ்வப்போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்து கொள்கின்றனர். நீண்ட நாட்களாக இதே வேலையில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படைக்கு தொடர்ந்து பலர் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க மீனவர்கள் சென்றுள்ளனர். மீன்பிடித்து கொண்டிருத்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அத்துமீறியுள்ளனர்.

தொடர்ந்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த படகையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும் காரைநகர் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்த தகவல் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை செய்யப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %