1 0
Read Time:1 Minute, 13 Second

தரங்கம்பாடி, நவம்பர்- 21;
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, நல்லுச்சேரியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு நித்திய கல்யாணி சமேத ஸ்ரீ சுயம்பு நாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத சோமாவரம் மற்றும் பிரதோஷம் முன்னிட்டு 108 சங்காபிஷேகம் மற்றும் ருத்ர ஹோமம் நடைபெற்றது. முன்னதாக சுயம்பு நாதர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது.

சங்காபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர். சிறப்பு ஹோமம் உலக நன்மை வேண்டி நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் கார்த்திகேயன் மற்றும் கணேசன் ஆகியோர் சிறப்பு பூஜைகளை செய்தனர். சிறப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %