0 0
Read Time:2 Minute, 24 Second

தரங்கம்பாடி, நவம்பர்- 27;
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவம்பர் 9-ம் தேதி தொடங்கி டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. முகாம்கள் அமைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் இணைப்பு உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் நவம்பர் 26, 27 ஆகிய நாட்களில் பொதுமக்களுக்கு ஏதுவாக தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே வாக்காளர் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காழியப்பாநல்லூர் மற்றும் திருக்கடையூர் ஊராட்சிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து புதிதாக பெயர் சேர்ப்பவர்களுக்கு படிவத்தை வழங்கினார்.

இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயபாலன், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் மாலிக், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி எம் ஸ்ரீதர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெற்றிவேல், செம்பை ஒன்றிய துணைப் பெருந்தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் கருணாநிதி, ஜெயமாலதி சிவராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார், செம்பை ஒன்றிய திமுக இளைஞரணி செயலாளர் செந்தில் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %