0 0
Read Time:2 Minute, 32 Second

தரங்கம்பாடி, நவம்பர்- 27;
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சியில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் அறிவுறுத்தலின்படி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கழக கொடி ஏற்றி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்மாலிக், சங்கரன்பந்தல்- உத்திரங்குடி மற்றும் இலுப்பூர் ஊராட்சிகளில் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி தூய்மை பணியாளர்கள் மற்றும் நலிவுற்றவர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கினார். இதேபோல் செம்பனார்கோவில் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் பி.எம்.அன்பழகன் செம்பனார் கோவில் மேலமுக்கூட்டு அண்ணா சிலை அருகே நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்.

தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல் 6 வது வார்டில் மரக்கன்றுகளை நட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். தரங்கம்பாடி பேரூர் கழக செயலாளர் முத்துராஜா பொறையார் மற்றும் தரங்கம்பாடியில் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் ஒன்றிய பேரூர், கிளை கழக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும் கொண்டாடினர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %