0 0
Read Time:2 Minute, 7 Second

தரங்கம்பாடி,டிச.04:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் ஊராட்சி சங்கரன்பந்தல் தனியார் திருமண மண்டபத்தில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலுப்பூர் ஊராட்சி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.அப்துல் மாலிக் தலைமை வகித்தார். முன்னால் சட்டமன்ற உறுப்பினர் சித்திக், மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். இதில் மாவட்ட திமுக மாவட்ட பிரதிநிதி கே.எஸ்.கருணாநிதி, திமுக பிரமுகர்கள் கோபி.கணேசன், பாண்டு, ஒன்றிய இளைஞரணி செயலாளர் இரா.செந்தில், தரங்கை பேரூர் இளைஞர் அணி செயலாளர் பாரி.சரவணன் மற்றும் திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை இலுப்பூர் கிளை தி.மு.கழகம் மற்றும் திமுக ஊடகவியலாளர் விக்கி என்கிற விக்னேஷ் செய்திருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %