0 0
Read Time:1 Minute, 52 Second

கோவை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமேதை ‘ஜெய் பீம்’ டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 66 ஆவது ஆண்டு நினைவு நாள் மலர் அஞ்சலி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி 06/12/2022 இன்று காலை 9.00 மணிக்கு தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானம் காமராஜர் கலையரங்கம் முன்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திராவிட முன்னேற்றக் கழக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் திரு டி . ஏ. ரவி அவர்கள் தலைமையேற்று அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் தி.மு.க நகர செயலாளர் திரு டி . வி. குமார் அவர்கள், பேரூர் பேரூராட்சி தலைவர் திரு. அண்ணாதுரை அவர்கள், வேடப்பட்டி நகர செயலாளர் திரு. தண்டபாணி அவர்கள், தொண்டாமுத்தூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் திரு. டி. என். சேகர் அவர்கள் கவுன்சிலர் டி. எம். தியாகு அவர்கள் முன்னாள் கவுன்சிலர் டி. எம். நாகராஜ் அவர்கள் மற்றும் தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் டாக்டர் மா. சிவக்குமார் உட்பட நூற்றுக்கணக்கான கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %