0 0
Read Time:1 Minute, 22 Second

கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது .நகர செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமைக் கழக பேச்சாளர் வழக்கறிஞர் முருக்குமணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், மாவட்ட இளைஞரணி தலைவர் வீரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா திருவூருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அதிமுக கவுன்சிலர்கள் ரெங்கன், பாலமுருகன், ஐடி விங் ஜெயராஜ் சிவஞானம், கூட்டுறவு சங்க தலைவர்கள் சரவணன், ஆசைத்தம்பி சுகந்தி, பேச்சாளர் வேலு, இளவரசன், தியாகராஜன் உள்பட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %