0 0
Read Time:3 Minute, 16 Second

சிதம்பரத்தில் பட்டப்பகலில் நகைக்கடையில் திருடிவிட்டு தப்பி ஓடிய வாலிபர்களை பொதுமக்கள் துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

சிதம்பரம் காசு கடை தெருவில் நகை கடை நடத்தி வருபவர் பிரபு(வயது 40). நேற்று மதியம் இவருடைய கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள் நகைகளை காண்பிக்குமாறு கடை ஊழியர்களிடம் கூறினர். உடனே ஊழியர்கள் மர்ம நபர்கள் கேட்ட நகைகளை எடுத்து காண்பித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் 3 கிராம் நகைகளை பாக்கெட்டில் போட முயன்றார். இதைப்பார்த்த கடை உரிமையாளர் பிரபு, 2 மர்ம நபர்களையும் பிடிக்குமாறு கடை ஊழியர்களிடம் கூறினார். உடனே கடை ஊழியர்கள் அவர்களை பிடிக்க முயன்றபோது இருவரும் கையில் வைத்திருந்த நகைகளை கடையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். தர்ம அடி கொடுத்தனர் தொடர்ந்து கடை ஊழியர்களும் திருடன் திருடன் என்று கூச்சலிட்டபடியே விடமால் அவர்களை துரத்தி சென்றனர். இதைப்பார்த்து சாலையோரம் நின்ற பொதுமக்கள் சிலர் நகைக்கடை ஊழியர்களுடன் சேர்ந்து மர்ம நபர்களை துரத்தி சென்றனர். சிதம்பரம் மேல வீதியில் வந்தபோது மர்ம நபர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இருவரையும் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்த சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி அங்கு வந்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் 2 மர்ம நபர்களிடமும் விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் கொடுத்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த மாசும் அலி மகன் அல்தாப் உசேன்(வயது 45), சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுதெருவை சேர்ந்த முகமது மன்சூர் மகன் முகமது அலி(42) என்பதும், கடையில் நகை வாங்குவது போல் நடித்து நகைகளை திருட முயன்றதும் தெரியவந்தது. கைது இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நகை வாங்குவது போல் நடித்து கடையில் திருட முயன்ற சம்பவத்தால் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %