0 0
Read Time:1 Minute, 47 Second

கடலூர் கிழக்கு மாவட்டம் அதிமுக பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் முன்னாள் எம்எல்ஏ அருள் மாவட்ட அவை தலைவர் குமார் பாசறை செயலாளர் சண்முகம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன் கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பரங்கிப்பேட்டை ஒன்றிய அவைத் தலைவர் பேராசிரியர் ரங்கசாமி வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் கலந்து கொண்டு சொத்து வரி பால் விலை மற்றும் மின் கட்டணம் உயர்த்திய திமுக அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார் இதில் நகர செயலாளர் மாரிமுத்து கிள்ளை நகர செயலாளர் தமிழரசன் மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் வீராசாமி ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்த ஜோதி சுதாகர் ரவி வசந்தி சுதந்திரதாஸ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள் நன்றி உரையாற்றினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %