0 0
Read Time:1 Minute, 33 Second

தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது என்றும், இது அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மீனவர்கள், டிசம்பர் 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தமிழகக் கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடாவிற்கும், தென்மேற்கு வங்க கடலுக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் கடலோரப் பகுதிகளில் வரும் டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %