0 0
Read Time:1 Minute, 42 Second

இலங்கையில் சென்ற வாரம் ஆறுமுக நாவலரின் குருபூஜை விழாவும் 200 வது பிறந்தநாள் நிறைவு விழாவும் நடைபெற்றது.

அவ்வமயம் யாழ்ப்பாணம் நகர சபையும், நல்லூர் ஆதீனமும், கலாச்சார அலுவலர்கள் திணைக்களமும் இணைந்து இவ்விழாவினை ஐந்து நாட்கள் காலையில் பொது அரங்கம் மாலை மில் விழாவாகவும் நடத்தினர். .இதில் நான்காம் நாள் ஆறுமுக நாவலர் அறக்கட்டளையின் இந்தியாவில் செயல்பாடுகள் பற்றிய பேசினர் .

மேலும் ஐந்தாம் நாள் நாவலர் புகழ் என்கின்ற விருது இலங்கையைச் சேர்ந்த ஆறு திருமுருகன் அவர்களுக்கும் இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கும் கனடாவை சேர்ந்த லம்போதரன் அவர்களுக்கும் இந்தியாவில் இருந்து புகழ்பெற்ற ஓவியர் பத்மவாசன் அவர்களுக்கும் அளிக்கப்பட்டது.

அந்த விழாவில் நாவலர் புகழ் என்கின்ற கவுரவத்தை அமெரிக்காவை சேர்ந்த ஹவாய் ஆதீனத்திற்கும், சிதம்பரத்தில் Rtn.PDG.Dr.S. அருள்மொழிசெல்வன் அவர்களுக்கு சென்னையில் கொடுத்தனர். ஆறுமுக நாவலர் பற்றிய ஓவிய கண்காட்சியும் ஆறுமுக நாவலரின் நூல்கள் புத்தாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %