0 0
Read Time:1 Minute, 39 Second

தமிழ்நாட்டில் 2020-21 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் JEE தேர்விற்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2020-21ம் கல்வியாண்டில் கொரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படாமல், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தற்போது 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் JEE தேர்வு எழுத 10ம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிடுவதில் சிக்கல் உள்ளதாகவும், இதனை பூர்த்தி செய்யாமலேயே விண்ணப்பிக்கும் வசதி வேண்டும் என தேசிய தேர்வு முகமையிடம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளதாகவும், தமிழக மாணவர்கள் பதற்றமடையாமல் JEE தேர்விற்கு தங்களை தயார் செய்யலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %