0 0
Read Time:1 Minute, 36 Second

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தரங்கம்பாடி பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை அரசு பணியாளராக நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செம்பை ஒன்றிய செயலாளர் தொல்காப்பியம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அறவாழி மாவட்ட செயலாளர் நாராயணன் கண்டன உரையாற்றினர் மேலும் தமிழ்நாடு புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %