0 0
Read Time:1 Minute, 11 Second

தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட 2022- 2023 ஆம் ஆண்டுக்கான நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா 30 /12 /2022 அன்று குளத்துப்பாளையம் ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ஜி. மாலா தலைமையற்றார். தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் டாக்டர் மா. சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். திட்ட அலுவலர் திருமதி கே. ஜெயந்தி அவர்கள் முகாமில் மாணவிகளின் சிறப்பான பங்களிப்பை எடுத்துரைத்தார். முதுகலை ஆசிரியர் திருமதி எஸ். சுபத்ரா சிறப்புரை நிகழ்த்தினார்.
விழா நிறைவாக முதுகலை ஆசிரியர் டி. ஆனந்த் நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %