0 0
Read Time:1 Minute, 48 Second

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தலைமை தாங்கினார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் கழக பேச்சாளர் பவித்ரன் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கானூர் பாலசுந்தரம் முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து அகத்தியர் பவுண்டேஷன் நிறுவனர் ஈஸ்வர ராஜலிங்கம் ஆகியார் முன்னிலை வகித்தனர் சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார் தொடக்க உரையாற்றினார்.

மாவட்ட அவை தலைவர் குமார் வரவேற்பு உரையாற்றினார் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி கலந்து கொண்டு எம் ஜி ஆரின் பிறந்தநாள் சாதனை குறித்து பேசினார் இதில் மாவட்ட குழு தலைவர் திருமாறன் பாசறை செயலாளர் சண்முகம் பேரவை செயலாளர் சுரேஷ் பாபு தில்லை கோபி மாவட்ட பிரதிநிதி மார்க்கெட் நாகராஜ், கருப்பு ராஜா வழக்கறிஞர் உமாசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %