0 0
Read Time:1 Minute, 19 Second

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 74வது குடியரசு தின விழா அரசு வழிகாட்டுதலின்படி நடந்தது.நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் N ஸ்ரீதர் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.தேசிய கொடியை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் R.அருள்மொழி (ஆங்கில முதுகலை ஆசிரியர்) ஏற்றினார். பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவி ஜெயமாலதி சிவராஜ், விவசாய சங்க மாவட்ட தலைவர் D சிம்சன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

வரவேற்புரை எம் துரை முதுகலை தமிழ் ஆசிரியர், வாழ்த்துரை பள்ளி மேலாண்மை குழு தலைவி அருள் செல்வி, நன்றியுரை N மணிமாறன் முதுகலை வணிகவியல் ஆசிரியர் ஆற்றினார்கள்.

செய்தியாளர்: க சதீஷ்மாதவன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %