0 0
Read Time:2 Minute, 11 Second

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தோற்றுநர் தின விழா இலக்கிய மன்றம் மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி கி. ஹேமலதா வரவேற்புரை நல்கினார்.

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சிந்தனை செல்வன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் த. ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் கே. பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தென்காசி சு. ஜஹகர் அரசு கூடுதல் தலைமைச் செயலர், ஆதிதிராவிடர் நல மற்றும் பழங்குடியினர் நலத்துறை வருகை புரிந்து, சுவாமி சகஜானந்தா அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து, மாநில அளவில் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பரிசு வழங்கி, வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் விழாவில் சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன், சிதம்பரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், பி.ரகுபதி, மண்டல உதவி இயக்குனர் பொன்.நடராஜன், சிதம்பரம் வருவாய் வட்டாட்சியர் ஹரிதாஸ், மற்றும் அரசுஅதிகாரிகள் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற மாணவிகளுக்கும், இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆசிரியர் வெ. ரவிச்சந்திரன் செய்தார். பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் எம்.பிரதாப் நன்றியுரை கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %