0 0
Read Time:2 Minute, 18 Second

பொறையார் நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 20-ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, பொறையாரில் உள்ள நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி நிறுவனத்தின் 20-ஆம் ஆண்டு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சுற்று சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார்.

இவ்விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் நந்தினி ஸ்ரீதர், கமலஜோதி தேவேந்திரன், தரங்கை பேரூர் மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல், தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம.ஸ்ரீதர், திமுக ஒன்றிய செயலாளர்கள், எம்,அப்துல் மாலிக், பி.எம்.அன்பழகன், அமுர்த.விஜயகுமார், பேரூர் திமுக செயலாளர் முத்துராஜா, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள், இருபால் ஆசிரியர்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மேலும் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %