0 0
Read Time:1 Minute, 15 Second

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், பணங்கரை மேட்டுத்தெருவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கற்பகஜோதி (32), தேன்மொழி (28) ஆகியோர் மிகவும் வறுமை நிலையில் உள்ளனர் என்பதை 28.01.2023 அன்று நாளிதழில் செய்தி வெளிவந்ததை அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சம்மந்தப்பட்ட
மாற்றுத்திறனாளிகளை நேரில் வரவழைத்து போர்கால அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்துதரப்படும் என உறுதியளித்தார்.

அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஐ.கண்மணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் ஆகியோர் உடன் உள்ளனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %