0 0
Read Time:1 Minute, 27 Second

கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பாக இன்று 16/02/ 2022 மதியம் 12.30 மணிக்கு தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நூலகத்திற்கு 550 புத்தகங்களை பள்ளியின் முன்னாள் மாணவியும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்களால் வழங்கப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி ஜி. மாலா அவர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள், மாணவச் செல்வங்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தனர்.
பள்ளி மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் வகையில் 550 புத்தகங்களை வழங்கி மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்களுக்கு தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத்தின் தலைவர் டாக்டர் மா. சிவக்குமார் வாழ்த்துக்களையும், நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %