0 0
Read Time:3 Minute, 12 Second

தருமை ஆதீனத்தால் நடத்தப்பட்டு வரும் வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன்,
ஸ்ரீ முத்தையா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 15 -வது ஆண்டு விழா 17.02.2023 வெள்ளிக்கிழமை தருமை ஆதீனம் 27-வது குருமா சந்நிதானம் அருள் ஆசியுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக தருமைஆதீனம் கலைக்கல்லூரியின் செயலர் முனைவர் திரு.R.செல்வநாயகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

பள்ளியின் நிர்வாகக்குழு தலைவர் ராஜேஷ், ஆடிட்டர் தலைமையிலும்,
பள்ளி செயலர் V.பாஸ்கரன் முன்னிலையிலும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் பள்ளி நிர்வாக குழு பொருளர் S.பாஸ்கரன், மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாக குழு துணைத் தலைவர்கள் S.முருகேசன், R.ஞானசேகரன், பள்ளி முதல்வர் R சரவணன், திருக்கடையூர் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஸ்ரீகாந்த், தருமை ஆதீனம் கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமார், பள்ளியின் முன்னாள் முதல்வர்கள் R.சுப்பிரமணியன், M.சந்திரசேகரன்ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் விழாவில் மாணவர்களும், பெற்றோர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு நிகழ்வாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளியின் முதல்வர் ஜெகதீஷ்குமார் வரவேற்புரையாற்றினார்.
முதுகலை ஆசிரியர் N. ஆனந்தன் பள்ளி ஆண்டறிக்கையை வாசித்தார். மேல்நிலை பொறுப்பாசிரியர் M.ராஜ்குமார் நன்றி கூற விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.
விழா நிகழ்வுகளை முதுகலை தமிழாசிரியை B.சரண்யா, துவக்கநிலை தமிழாசிரியை திருமதி. O.S.சரண்யா, மற்றும் முதுகலை ஆசிரியர் R.பாலசுப்பிரமணியன், ஆகியோர் இணைந்து சிறப்பாக தொகுத்து வழங்கினர்.

விழா முன்னேற்பாடுகளை பள்ளி செயலர் வழிகாட்டலில், முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் வேன் ஓட்டுநர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %