0 0
Read Time:1 Minute, 24 Second

மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கிய பணிகளுக்கு மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜகுமார் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை, பிப்ரவரி- 17:
மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டு மற்றும் 23-வது வார்டு பகுதிகளில் புதிய நியாய விலை கடை கட்ட தலா ரூ‌.18 லட்சமும், 6-வது வார்டில் திருவிழந்தூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கலையரங்கம் கட்டுவதற்கு ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இடங்களில் நடைபெற்ற பூமி பூஜையில் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி, நகராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தனர். இதில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %