0 0
Read Time:1 Minute, 40 Second

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே துளசேந்திரபுரம் அரசு மேனிலைப்பள்ளியில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கொள்ளிடம் ரோட்டரி சங்கம் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இனைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கொள்ளிடம் ரோட்டரி சங்க தலைவர் முகில்வண்ணன் தலைமையில் ரோட்டரி சங்க அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அதில் 63 பேர் கண் பார்வை சிகிச்சைக்காக பஸ் மூலம் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பயனாளிகள் அனைவருக்கும் உணவு மற்றும் தேநீர் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இம்முகாமில் கண் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆரோக்கிய அன்னை நர்சிங் கல்லூரி மாணவிகள் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது. இறுதியில் ரோட்டரி சங்க செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %