0 0
Read Time:1 Minute, 47 Second

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட அருள்மிகு பரிமளரெங்கநாதர் கோயில் நந்தவனத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு. கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி என்ற தலைப்பில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியின் நிறைவு விழாவில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் 10 நாட்கள் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி 555 மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மாகாபாரதி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, மயிலாடுதுறை ஒன்றியக் குழுத்தலைவர் காமாட்சிமூர்த்தி, தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவர் சுகுணாசங்கரி குமரவேல், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் ஐ.கண்மணி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணணிகள், கலைக் குழுவினப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %