1 0
Read Time:2 Minute, 50 Second

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் / சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், கோரி 52 மனுக்களும், வேலை வாய்ப்பு கோரி 28 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி 45 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 10 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கி கடன். மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 20 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 52 மனுக்களும், மொத்தம் 207 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தொடர்ந்து கடந்த (27-02-2023) திங்கட்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு விட்டதின் பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்ட குத்தாலம் வட்டாரத்தை சார்ந்த 20 பயனாளிகளுக்கு இலவச வீடு மனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.பி. மகாபாரதி வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சோ. முருகதாஸ், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் இ.கண்மணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ். முத்தமிழ்செல்வன் மாவட்ட வழங்கல் அலுவலர் சி. அம்பிகாபதி, மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %