0 0
Read Time:1 Minute, 22 Second

மயிலாடுதுறை, மார்ச்- 13;
முன்னாள் முதலமைச்சரும் , அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மயிலாடுதுறை முத்து வக்கீல் சாலையில் அதிமுகவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முத்து வக்கீல் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னால் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பவுன்ராஜ் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட மாவட்ட, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பங்கேற்று திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் வழக்கு பதிவு செய்த திமுக அரசை கண்டித்து நிர்வாகிகள் பலர் கோஷங்களை எழுப்பினர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %