0 0
Read Time:2 Minute, 27 Second

செம்பனார்கோவில், மார்ச்- 19:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் மத்திய ஒன்றியம் மேமாத்தூர், வடகரை ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70 – வது பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார கூட்டம் செம்பை மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவரும் மாவட்ட பிரதிநிதியுமான தட்சணாமூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் எஸ் எம் சம்சுதீன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

மாவட்ட துணை செயலாளர் மு.ஞானவேலன், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல் மாலிக், பி.எம்.அன்பழகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஹேப்பி அர்ஷத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம் முருகன் தலைமை கழக பேச்சாளர் ஆரூர் மணிவண்ணன் கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகளை விலக்கி சிறப்புரையாற்றினர். அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக், தரங்கம்பாடி பேரூர் செயலாளர் முத்துராஜா தரங்கம்பாடி பேரூர் மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் நத்தம் வின்சென்ட், கபிலன், ஒன்றிய அவைத்தலைவர் கோபால் மாவட்ட பிரதிநிதிகள் மணிமாறன் சிவகுமார் கணேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %