0 0
Read Time:1 Minute, 27 Second

கடலூர் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் அதிவேக இணையதள 1 ஜி.பி.பி.எஸ். சேவைகளை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 683 கிராம ஊராட்சிகளும், இச்சேவைகளை பெறுவதற்கு தரை வழி மூலமாக 229 கி.மீ மற்றும் மின்கம்பம் வழியாக 2,364 கி.மீட்டருக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை 1 ஜி.பி.பி.எஸ். வேகத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் கிடைக்க பெறும். கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்திட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேற்கண்ட தகவல் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %