0 0
Read Time:1 Minute, 41 Second

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடை பெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரெங்கசாமி தலைமை தாங்கினார். பற்றாளராக ஒன்றிய பணி மேற்பார்வையாளர் குணசேகரன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வரும் நிதி யாண்டில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் செய்யப்பட வேண்டிய வேலைகள், 15-வது மானிய நிதிக்குழுவில் ஒதுக்கப்பட்ட வேலைகள், வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்க ளுக்கு 35 கிலோ அரிசி, அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயனாளி கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சுய உதவி குழு உறுப்பினர் கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், பணிதள பொறுப்பாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், துப்புரவு மற்றும் தூய்மை காவலர்கள், 100 நாள் பணிமேற்பார்வையாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %