0 0
Read Time:2 Minute, 51 Second

தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மற்றும் தொண்டாமுத்தூர் கிளை ஆலோசனை கூட்டம் தொண்டாமுத்தூர் காமாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் 26/ 03/ 2023 காலை 10:30 மணிக்கு மாவட்ட தலைவர் பி. பி. ராமதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் ரங்கநாதன், லோகநாதன், ராமகிருஷ்ணன், கனகராஜ், பழனிச்சாமி மற்றும் மகளிர் அணி அமைப்பாளர் என். நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் பி. வெள்ளிங்கிரி அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் மறைந்த முன்னாள் மாவட்ட தலைவர் யூ.வி. முத்து அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்தப்பட்டது. மற்றும் மறைந்த தையற்கலைஞர்களான வெங்கடாசலம், கோபாலகிருஷ்ணன், ராதிகா ஆகியோர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட செயலாளர் தாயனூர் ஆர். நாராயணசாமி, மாநில பிரதிநிதி ப. தீர்த்தகிரி, மாவட்ட பொருளாளர் கே. ரகு, நண்பர்கள் கலைக்குழு தலைவர் தொ. க. பார்த்திபன், செயலாளர் தொ. ஆ. மூர்த்தி, தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் டாக்டர் மா. சிவக்குமார், சரஸ்வதி ஹரிஹரன், அங்கு லட்சுமி, சி . ஷைனி சிவகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில் நாகு (எ) நடராஜ், கங்காதரன், குமார், கருப்புசாமி உட்பட 50 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்களின் கருத்து கேட்பு மற்றும் பதிலுரை 2023 2024 ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர்களை நலவாரியத்தில் இணைத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
காமாட்சி அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %