0 0
Read Time:1 Minute, 26 Second

கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே ஏ பாண்டியன் எம் எல் ஏ அறிவுறுத்தலின்படி பல்வேறு துரோகங்களை முறியடித்து நீதிமன்ற வழக்குகளை வென்றெடுத்து கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு கிள்ளை பேரூராட்சியில் கிள்ளை பேரூர் கழக செயலாளர் பி தமிழரசன் அவர்கள் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் தேன்மொழி மாவட்ட இளைஞரணி தலைவர் பொன் தமிழ்மணி முடசல் ஓடை கவுன்சிலர் கலைமணி எம்ஜிஆர் திட்டு அன்பு ஜீவா மற்றும் அனைத்து நிர்வாகிகள் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %