2 0
Read Time:1 Minute, 25 Second

ஸ்ரீ மகாவீர் அவர்களின் 2622 ஆம் ஆண்டு அவதார திருநாளை முன்னிட்டு சிதம்பரம் ஜெயின் யுவா சங்கத்தின் சார்பில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தை கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.
சிதம்பரம் நகர கழக செயலாளர் ஆர்.செந்தில்குமார், நகர அம்மா பேரவை செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, மாவட்ட மாணவர் அணி பொருளாளர் சங்கர், ஜெயின் சங்க நிர்வாகிகள் கமல் கிஷோர், பானு சேட், மதன்லால், மோதிலால், ஜித்தன் ராஜ், பிரகாஷ், ஜெயின் யுவா சங்க நிர்வாகிகள் தலைவர் ரோனக் மேத்தா, செயலாளர் விஷால், பொருளாளர் நீரஜ், ரோஷன், தருண், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அமைதி ஊர்வலத்தை தொடர்ந்து சிதம்பரம் ஜெயின் ஆலயத்தில் நடைபெற்ற அன்னதானத்தை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %