0 0
Read Time:1 Minute, 30 Second

மயிலாடுதுறை, ஏப்ரல்- 15:
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கவிதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் மூலமாக காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை வழங்கிட வேண்டும், திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போல் மாதாந்திர ஓய்வூதியம் 6750 அகவிலை படியுடன் வழங்க வேண்டும் , ஓய்வு பெறும் வயதை 60 இலிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும், சத்துணவு பணியாளரின் ஆண் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %