0 0
Read Time:2 Minute, 4 Second

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

அம்பேத்கரின் பிறந்த நாளை கொண்டாடுமாறு தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் திடீர் உத்தரவிட்டார். அதன் பெயரில் மாவட்டம் தோறும் நடக்கும் விழாவில் அனைத்து அணி தலைவர்களும், நிர்வாகிகளும், பங்கேற்க வேண்டும் என்றும் முன்னதாகவே காவல்துறையில் அனுமதி பெற வேண்டும் என்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி. ஆனந்த் மு.சட்டமன்ற உறுப்பினர் நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பினார்.
தலைமையில் இருந்து வந்த உத்தரவின்பெயரில் மயிலாடுதுறை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் காவல் துறையினரிடம் முன்னதாகவே அனுமதி பெற்று மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி தலைமையில் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகாமையில் இருந்து சி.ஆர்.சி டிப்போ வரையில் நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்று அதன் அருகாமையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாவட்ட தலைவர்
சி.எஸ்.குட்டிகோபி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உடன் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர ,கிளை, நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %