0 0
Read Time:1 Minute, 39 Second

சீர்காழி அடுத்த எடமணலில் 9,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்குகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்று வட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் பாதுகாக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே பாதுகாக்கப்பட்டு வந்த நெல் சேமிப்பு கிடங்குகள் மழைக்காலங்களில் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு 9,000 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட கூடுதல் நெல் சேமிப்பு கிடங்குகளை கட்ட உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து எடமணல் கிராமத்தில் புதிதாக 24 நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையே கான்கிரீட் தளத்துடன் கூடிய மேற்கூரை அமைக்கப்பட்டு ரூபாய் 9.43 கோடியில் பணிகள் முடிவடைந்தன. இந்நிலையில், இந்த நெல் சேமிப்பு கிடங்குகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %