கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் சிதம்பரம் பகுதியில் கொரானா நேரத்தில் பொதுமக்களை கொரானா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் சிறப்பாக பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினருக்கு மருந்தாளுனர் சங்க செயலாளர் வெங்கடசுந்தரம் தலைமையில் சித்தா மருத்துவர் பரணிதரன்,மொத்த மருந்துகள் பிரிவு தலைவர் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளர் லால்மேக்கிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் (இம்மீனோ 3) மாத்திரைகள் 1000 மற்றும் ஆர்சனிக் ஆல்பம் 100 மாத்திரைகள் அடங்கிய குப்பிகள் ரூ 15 ஆயிரம் மதிப்பிலான மாத்திரைகளை வழங்கினர்.
இதில் சிதம்பரம் நகரத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களும் கலந்துகொண்டு சமூக இடைவெளியுடன் நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரைகளை சிதம்பரம் டிஎஸ்பியிடம் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
செய்தியாளர்: பாலாஜி, சிதம்பரம்.