0 0
Read Time:2 Minute, 18 Second

சின்னூர் ஊராட்சியில் கபாடி போட்டி – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்!.

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், சின்னூர் ஊராட்சி, சின்னூர் தெற்கு கிராமத்தில் பாரதி இளைஞர் நற்பனி மன்றம் மற்றும் சின்னூர் தெற்கு கிராம பொதுமக்களின் சார்பில் நடைபெறும் 18 ஆம் ஆண்டு மாபெரும் கபாடி போட்டியினை கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அகத்தியம் பெளண்டேஷன் நிறுவனத் தலைவரும், கழக நிர்வாகியுமான டாக்டர்.ஈஸ்வர் ராஜலிங்கம், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோவி.ராசாங்கம், மாவட்ட கழக இணை செயலாளர் ரெங்கம்மாள், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் ஜெ.வசந்த், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் மு.முடிவண்ணன், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் ப.வீராசாமி, கிள்ளை பேரூர் கழக செயலாளர் தமிழரசன், ஒன்றிய கழக அவைத் தலைவர் ரெங்கசாமி, குமராட்சி ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் இளஞ்செழியன், புவனகிரி ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சித்ரா, அர்ஜீனன், நிர்வாகிகள் பிரியா, நாகராஜன், பக்கிரி, ஆனந்தன், சிவக்குமார், சின்னூர் தெற்கு கிராம நிர்வாகிகள் தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் ஜானகிராமன், நிர்வாகிகள் வெங்கடாஜலம், பாபு, ஜோதி, சிவா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %