0 0
Read Time:1 Minute, 53 Second

சிதம்பரம் வட்டம் விளாகம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தளவாடப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவைப்படும் ரத்த அழுத்த கண்டறியும் கருவிகள் இரத்த சர்க்கரை அளவு காணும் கருவிகள் மெத்தை விரிப்புகள் போர்வைகள் நோயாளிகளுக்கான சக்கர நாற்காலி மற்றும் வயதான நோயாளிகளுக்கான பொருட்கள் மேலும் பல மருத்துவ மனை தளவாடை பொருள்கள் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கப்பட்டது.

விழாவிற்கு சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பிரகதீஸ்வரன் தலைமை தாங்கினார் ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் தீபக்குமார் வரவேற்றார் மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி மருத்துவமனை சார்பில் தளவாடப் பொருட்கள் பெற்றுக் கொண்டு நன்றி கூறினார் இந்நிகழ்ச்சியில் செவிலியர்கள் மருந்தாளர்கள் ஊழியர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி உறுப்பினர்கள் தில்லை செந்தில்குமார் அகோர மூர்த்தி கோவிந்தராஜ் அண்ணாமலை பல்கலைக்கழக ஆராய்ச்சியை இயக்குனர் ரகுபதி முடிவில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்க செயலாளர் முனைவர் சின்னையன் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %