0 0
Read Time:1 Minute, 47 Second

காட்டுமன்னார்கோயில் அருகே 8 கோடி ரூபாய் மதிப்பில் அரசு கல்லூரி கட்டுவதற்கு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார் காட்டுமன்னார்கோயில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு ஆண்கள் பள்ளியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட குமராட்சி ஊராட்சி கீழ வன்னியூர் கிராமத்தில் தொழிலதிபர் சேதுராமர் குடும்பத்தினர் கல்லூரிக்கு நிலம் தானமாக வழங்கினார் அதனைத் தொடர்ந்து 8கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார் சிந்தனை எம்எல்ஏ முன்னிலை வகித்தார் ஊராட்சி மன்ற தலைவர்கே.ஆர் ஜி தமிழ்வாணன் வரவேற்றார் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார் நிகழ்ச்சியில் ஆர்டிஓ ரவி தாசில்தார் தமிழ்செல்வன் இப்ராஹிம் மோகன்ராஜ் உதவி பொறியாளர் ராஜா ஒப்பந்ததாரர் சரவணன் கல்வி குழு உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %