0 0
Read Time:1 Minute, 52 Second

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 19-ந்தேதி நடக்கிறது மயிலாடுதுறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொள்கின்றனர்.

எனவே மாற்றுத்திறனாளிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது தேவையை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். மேலும் இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல்கள் மற்றும் மருத்துவ சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் அளவிலான தற்போதைய போட்டோ 1, கைப்பேசி எண், ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %