0 0
Read Time:1 Minute, 35 Second

சிங்கப்பூர் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளார்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலையில் சிங்கப்பூர் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் இன்று நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

தொடர்ந்து, மாநில அரசுத் துறை நிறுவனங்கள் மற்றும் சிங்கப்பூர் தொழில் நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %